ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைச் சங்கநாதம் இவர்.சென்னை இராயப்பேட்டை சாக்கிய பவுத்த சங்கத் தலைவராக இருந்து அரும்பணி ஆற்றியவர். 1907 ஆம் ஆண்டில் ‘‘தமிழன்’’ என்ற வார இதழை நடத்திய பெருமையும் அவருக்கு உண்டு.
பார்ப்பன வேதாந்த விவரம், நந்தன் சரித்திர விளக்கம், நூதன ஜாதிகள் உற்பவ பீடிகை, திருவள்ளுவ நாயனார் பறைச்சிக்-கும், பார்ப்பானுக்கும் பிறந்தார் என்னும் பொய்க்கதை விவரம் முதலிய நூல்களை எழுதிய சிந்தனையாளர் இவர்..இரட்டைமலை சீனிவாசன் இவரின் நெருங்கிய உறவினர் ஆவார்.
1891 டிசம் பரில் திராவிட மகா ஜனசபையின் சார்பாக முதல் மாநாடு நடைபெற்றது. இதற்கு முன் முயற்சி எடுத்தவர்கள் அயோத்திதாசரும், இரட்டைமலை சீனிவாசனும் ஆவர்.
கல்வி கற்கக் கூடிய வாய்ப்புகளுக்கு உள்ள சமூகத் தடையை நீக்க வேண்டும்; கிராம ஒன்றியங்கள், நகராட்சிகள் ஆகியவற்றில் பிரதிநிதித்துவம் தரவேண்டும்; முன்சீப், மணியக்காரர் வேலை தரப்பட வேண்டும்; இந்துக்கள் பணி புரியும் நீதிமன்றங்களில் செல்வதற்கான தடையையும், பொது நீர் நிலைகளைப் பயன்படுத்துவதற்கான சமூகத் தடைகளையும் நீக்க வேண்டும்; பறையர் என்பதைக் கேவலப்படுத்தும் நோக்கில் சொல்வதோ, பறையர்க்கு இழிவான சிறு பணிகளைத் தருவதோ கூடாது என்று அம்மாநட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தாழ்த்தப்பட்டவர்களுக்குக் கல்வி அளிக்கப்பட வேண்டும் என்பதில் அயோத்திதாசர் முக்கிய மாகக் கவனம் செலுத்தி னார். கல்விதானே உண்மையான கண் - அதனை இந்துத்துவ வருணாசிரம சமுதாயம் அவித்து விட்டதல்லவா?
அவருக்குக் கிடைத்த ஒரு பவுத்த சிந்தனையாளர்தான் - அமெரிக்க இராணுவத்தில் கர்னலாகப் பணியாற்றி, ஒடுக்கப்பட்ட மக்களுக்குக் கல்விக் கண் கொடுத்தவர் கர்னல் ஆல்காட்!
1894 இல் சென்னையில் தீண்டப்படாத மக்களுக்காக தனிப் பள்ளிக் கூடங்களைத் திறந்தார். அவருக்கு அயோத்திதாசர் அளித்த விண்ணப்பம் முக்கியமானது. தமிழ் நாடெங்கும் தாழ்த்தப்பட்ட பிள்ளைகளுக்குக் கல்விச் சாலைகளைத் திறக்க வேண்டிய விருப்பத்தை அதில் வெளியிட்டிருந்தார்.
அந்த விண்ணப்பத்தில் சில வரலாற்றுக் குறிப்புகள் கிடைக்கின்றன. பஞ்சமர்கள்தான் ஆரம்ப காலத்தில் திராவிடர்களென அழைக்கப்பட்டதை அதில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்குமிடையே ஏற்பட்ட பகை உணர்வுகளை எல்லாம் அதில் வெளிப்படுத்தியுள்ளார்.
ஆரியராவது திராவிடராவது என்று பேசும் அறிவு ஜீவிகள் முதலில் அயோத்திதாசரைப் படிக்கட்டும்.அனைவருக்கும் கற்றுக் கொடுத்தவர் அயோத்தி தாசர் ஆவார்.
- மயிலாடன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக